Author: admin

லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு

முல்லைத்தீவு உப்புமாவெளி அளம்பில் சுவாமிதோட்ட பகுதியில் இயங்கிவந்த லதனி சிறுவர் இல்லத்தை விசேட தேவையுடையோருக்கான இல்லமாக மாற்றும் நிகழ்வு லதனி நிறுவன இயக்குநரும் நிறுவுனருமான அருட்தந்தை நெவில் கூஞ்ஞே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில்…

நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்திற்கான அடிக்கல்

சாவகச்சேரி பங்கிற்குட்பட்ட நாவற்குழி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித அற்புத அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

ஆலடி கிராமத்தில் புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல்

மானிப்பாய் பங்கின் ஆலடி கிராமத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள புனித யோசேப்பு ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 08ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. ஆலயத்திற்கான அடிக்கல்லை பங்குத்தந்தை அவர்கள் நாட்டிவைத்ததுடன் இந்நிகழ்வில்…

மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு புரட்டாதி மாதம் 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருவுளப்பணியாளர் சபை இலங்கை…

மாகாண மட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி

யாழ். மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட ரோபோ தொழினுட்பம் மற்றும் புத்தாக்கப் போட்டி ஆவணி மாதம் 28ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணம் சென் ஜோண்ஸ் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த 10 மாணவர்கள் பங்குபற்றிய நிலையில்…