மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு ஆவணி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காலை திருப்பலியை தொடர்ந்து இடம்பெற்ற இச்சந்தை நிகழ்வில் மாணவர்களால் மரக்கறி வகைகள், சிற்றுண்டிகள், உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள், போன்றவை விற்பனை செய்யப்பட்டன.
மாணவர்களின் விற்றல் வாங்கல் திறனை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில் மாணவர்களும் பங்குமக்களும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தனர்.

