மல்வம் திருக்குடும்ப ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் இரத்ததான முகாம் பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் வழிநடத்தலில் ‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் நடைபெற்ற இம்முகாமில் 24 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin