நெடுந்தீவு பங்கில் அமைக்கப்படவுள்ள புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அவருடன் இணைந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள் ஜோகராஜ், இயூஜின் அமல்ராஜ், அருட்தந்தையர்கள் கான்ஸ்போவர், சோபன் றூபஸ் மற்றும் அருட்சகோதரி சுகிர்த செல்வி, ஆலய நிர்வாகத்தினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

