புங்குடுதீவு 10 வீட்டுத்திட்ட வோளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை லிhயன்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
05ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை யூட் கரோவ் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை குருநகர் உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை கிறிஸ்ரி ஞானராஜா றொகான் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

