டிட்வா புயலால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய இளையோர் கழகத்தினரும் தமது உதவிகளை வழங்கியுள்ளனர்.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் மார்கழி மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்ற இந்நிகழ்வில் இளையோர் உடையார்கட்டு பிரதேசத்தை தரிசித்து அங்கு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உலர்உணவு பொதிகளை வழங்கிவைத்தனர்.
