திருமறைக் கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி கார்த்திகை மாதம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.

திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

இத்திருப்பலியில் மன்ற அங்கத்தவர்கள், இறந்தவர்களின் உறவினர்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin