சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய கத்தோலிக்க இளையோர் ஞாயிறு மற்றும் திருச்சிலுவை மகிமைவிழா சிறப்பு நிகழ்வுகள் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் திருச்சிலுவை பவனியாக ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி நிறைவில் ஆலய இளையோருக்கான ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வில் 25 வரையான இளையோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin