கட்டைக்காடு பங்கு பூனைத்தொடுவாய் வேளாங்கண்ணி அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
12ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 13ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். பல்கலைக்கழக ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மைக் டொனால்ட் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியையை பங்குத்தந்தை அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

