நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
06ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை செபமாலைதாசர் சபை அருட்தந்தை ஸ்ரிபன் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை ஆனைக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.