நெடுந்தீவு பங்கு குழந்தை இயேசு இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்இரத்ததான முகாமில் 45 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.