தாத்தா பாட்டிகள் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து முதியோர்களுக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.

இவ் ஒன்றுகூடல் நிகழ்வில் தேநீர் விருந்து, கலைநிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் முதியோர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் 55 வரையான முதியோர் பங்குபற்றியிருந்தனர்.

By admin