அளவெட்டி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மேரியன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 01ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.

22ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிறார்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நற்கருணைவிழாவும் இடம்பெற்றன.

திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களும் நற்கருணை விழா திருப்பலியை இளவாலை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin