கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 1ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கலாசாலை றதிலக்ஸ்மி மண்டபத்தில் நடைபெற்றது.
கிறிஸ்தவ மன்றத்தினரின் ஒழுங்குபடுத்தலில் கலாசாலை அதிபர் திரு. லலீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு. பிறட்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ், உரும்பிராய் பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் கோப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை மொண்ட்பேட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

By admin