ஊர்காவற்துறை திருக்குடும்ப கன்னியர் மடம் ஸ்தாபிக்கப்பட்டதன் 125ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
கன்னியர்மட முதல்வி அருட்சகோதரி தயாநாயகி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நடைபெற்றன. திருப்பலியை ஊர்காவற்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ், திருக்குடும்ப கன்னியர் மட மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ், அருட்சகோதரிகள், பங்கு மக்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin