இளவாலை புனித யாகப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 25ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 
16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
 
நற்கருணைவிழா திருப்பலியை புனித சவேரியார் குருமட அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களும் திருவிழா திருப்பலியை அமலமரித் தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.

By admin