அச்சுவேலி புனித திரேசா மகளிர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முத்தமிழ் விழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி அருள்மரியா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பாடசாலை மட்ட தமிழ்தின போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உதவி கல்வி பணிப்பாளர் திரு. பூபாலசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் கல்லூரி ஓய்வுநிலை பிரதி அதிபர் திருமதி சுகந்தி மகேஸ்வரதாசன் மற்றும் கல்லூரி ஓய்வு நிலை ஆசிரியர் இந்திராணி குமரகுருபரன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பெற்றோர்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin