பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி 13.06.2020 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திருவிழா திருப்பலி 13.06.2020 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.
மே 17, கடந்த ஞாயிறு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும், Laudato Sí வாரத்தை முன்னிட்டு, உலகளாவிய கத்தோலிக்க காலநிலை இயக்கம், இணையதளம் வழியாக, ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில், படைப்பைப் பாதுகாப்பது வழிபாட்டுடன் எவ்வாறு தொடர்புகொண்டிருக்கிறது என்பது பற்றி விளக்கினார், கர்தினால் டர்க்சன்
Continue reading இறைவா உமக்கே புகழ் : படைப்பின் நற்செய்தி
முள்ளிவாய்கால் பகுதியில் பல்லாயிரம் மக்களோடு காணாமல் போன அருட்பணி. பிரான்சிஸ் யோசப் அடிகளார் 50 வருடகால குருத்துவ பயணத்தில் தனித்துவமான பல சாதனைகளை புரிந்திருக்கிறார். இறைவழியில் நின்று மனத்துணிவுடன் உண்மைக்குச் சான்று பகர்ந்து துன்பப்பட்ட மக்களோடு தனது வாழ்வினையும் இணைத்துக்கொண்டார். காணாமல் போனோர் பட்டியலில் அவரது பெயர் சோர்த்துக் கொள்ளப்பட்டு, அவரது இருப்பு கேள்விக் குறியானாலும் தமிழாரின் வரலாற்றில் அவர் தனித்துவமான ஒரு இடம்பிடித்தவர். இவ்வருட்பணியாளரின் வாழ்வின் சில பதிவுகள்.
இப்பதிவு வெறும் கற்பனையுமன்று உண்மையுமன்று. ஈழப்போரின் இறுதி நாட்கள் பற்றி பக்கச்சார்பற்ற ஊடகங்கள் மற்றும் நூல்கள் மூலமாகப் பெற்ற தரவுகள் இதன் பின்புலமாக அமைகின்றன.
இறைமகன் இயேசுவின் அடியவனாக இறுதி மூச்சு வரை தனது அழைப்பின் கசப்பான காடியைக் குடித்து தனது வாழ்வு முழுவதையும் மக்கள் பணிக்காக அர்ப்பணித்து, தன்னை நம்பியிருந்த மக்கள் ஒவ்வொருவரிலும் இறைவனின் திரு உருவைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டிய வேளையில் அருகில் இருந்து தன் அழைத்தலுக்குச் சான்று பகரத் தன் இன்னுயிரை நீத்து யாழ். மறைமாவட்ட அருட்பணித் தியாகச் செம்மல்கள் வரிசையில் இடம் வகிக்கும் அமரர் சராவின் உள்ளத்தில், போரின் இறுதிக் கட்டத்தில், எழுந்து அலைமோதிய எண்ணத் திவலைகள், சிந்தனைக் கீற்றுகள் எவை எவையாக இருந்திருக்கும் என்னும் ஊகத்தில் இக்கட்டுரை வரையப்படுகின்றது. எவருடைய உள்ளத்தையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை; எப்பிரிவினரையும் குற்றம் சாட்டும் எண்ணமும் இல்லை.
நீ. மரிய சேவியர் அடிகள்
பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தல திருவிழா
பண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா யாத்திரை தல திருநாள் திருப்பலிபண்டத்தரிப்பு புனித பற்றிமா மாதா யாத்திரை தல திருநாள் திருப்பலி
Posted by Holy Mary on Tuesday, May 12, 2020
13.05.2020 காலை 7.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலமையில் நடைபெற்றது.
தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக இறைமக்கள் வழிபாடுகளில் பங்குபற்ற அனுமதிக்கப்படத நிலையில் திருநாள் திருப்பலி DAN TV, HOLY MARY, பகலவன் TV, வதனம் TV, இறை ஒளி TV, ஆகிய தொலைக்காட்சி, இணையத்தள தொலைக்காட்சிகள், சமூக வலைத்தளங்களுடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
நம் மீட்பிற்கான விசுவாச அழுகுரல், இறைவனின் இரக்கத்தையும் வல்லமையையும் நம்மை நோக்கித் திருப்புகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இயேசு மலை மீது நின்று வழங்கிய எட்டு பேறுகள் குறித்து கடந்த சில வாரங்களாக தன் புதன் மறைக்கல்வித்தொடரை வழங்கி வந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 06, இப்புதனன்று, ‘செபம்’ குறித்த ஒரு புதிய தொடரைத் துவக்கினார். செபத்தின் வல்லமை பற்றி விளக்குவதற்கு, முதலில், எரிகோவை விட்டு வெளியில் செல்லும்போது, பர்த்திமேயு என்ற பார்வையற்ற இரந்துண்பவருக்கும், இயேசுவுக்கும் இடையே இடம்பெற்ற நிகழ்வு குறித்த, மாற்கு நற்செய்தி பகுதி வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் மறைக்கல்வியுரை தொடர்ந்தது.
Continue reading மறைக்கல்வியுரை : செபம் என்பது விசுவாசத்தின் உயிர் மூச்சு62 வயது நிரம்பிய கர்தினால் தாக்லே அவர்கள், பிலிப்பீன்ஸ் நாட்டின் மனிலா உயர் மறைமாவட்டத்தின் 32வது பேராயராக, 2011ம் ஆண்டு முதல், 2019ம் ஆண்டு வரை பணியாற்றினார்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிலிப்பீன்ஸ் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களை, கர்தினால்கள் அவையில் உயர்ந்த நிலையாகிய, கர்தினால்-ஆயர் என்ற நிலைக்கு, மே 01, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார். keep on reading!