Category: What’s New

கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா

வரலாறு காணாத பக்தர்களின் பங்குபற்றுதலோடு கச்சதீவு புனித அந்தோனியார் தவக்கால யாத்திரைத்தல வருடாந்த திருவிழா நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் வழிபாடுகள் ஆரம்பமாகி, திருச்செபமாலை,…

அருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

அனுராதபுரம் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களால் 2025ஆம் ஆண்டு மார்கழி மாதம் நியமனம்பெற்ற அருட்தந்தை நிஸாந்த சாகர ஜெயமான்ன அவர்களின் ஆயர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. ஆயர் பேரருட்தந்தை நொபேட்…

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்

பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற பங்குனி மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாசி மாதம் 11, 24ஆம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…

கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை

கிளிநொச்சி மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான வதிவிட பாசறை மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை உருத்திரபுரம் ஆரோபணம் இளைஞர் இல்லத்தில் நடைபெற்றது. அருட்தந்தையர்கள் சதீஸ்குமார் மற்றும் அலின் கருணாகரன் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெயக்குமார் அவர்களின்…

ஆயருடனான சந்திப்பு

செபமாலைதாசர் கன்னியர் சபை தலைமை அருட்சகோதரி ஹெலன் மற்றும் இந்நியாவிலிருந்து வருகை தந்த சபையின் ஆலோசகர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு மாசி மாதம் 23ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…