கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு

நவ.28. இலங்கை கத்தோலிக்க இளைஞர்களின் 71வது தேசிய மாநாடு மன்னார் மடுமாதா திருத்தலத்தில் நவம்பர் 24,25,26 திகதிகளில் நடைபெற்றது. ஆரம்பநாளில் இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் வருகைதந்திருந்த சிங்களம் மற்றும் தமிழ் பேசுகின்ற இளைஞர் இளம் பெண்கள் பலர் மடுத்தாயாரின் திருச் சந்தியிலிருந்து…

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ

நவ.22,2017. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயராகப் பணியாற்றிய, ஆயர் பிதேலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னான்டோ (Fidelis Lionel Emmanuel Fernando) அவர்களை, இப்புதனன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான பெரும் பாவம்

நவ.20,2017. உதவி தேவைப்படும் நிலையிலுள்ள நம் சகோதர, சகோதரிகள் குறித்து பாராமுகமாக இருப்பதே, வறியோருக்கு எதிரான மிகப்பெரும் பாவம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று தன் மறையுரையில் கூறினார்.

தலைமைத்துவ பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு.

நவ.20. யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மறைகல்வி நிலையத்தில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் தலைமையில் நடைபெற்றது.

திருமறை கலாமன்றத்த தயாரித்த மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம்

நவ.18. திருமறை கலாமன்றம் தயாரித்து வழங்கிய மஹாகவியின் புதியதொரு வீடு நாடகம் 18.11.2017 (சனி ) காலை 09.00மணி, 11.00மணி, மாலை4.00 மணி என மண்டபம் நிறைந்த மூன்று காட்சிகளாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் மேடையேற்றப்பட்டு பலராலும்…