விசுவமடு புனித இராயப்பர் ஆலய முதல்நன்மை
தர்மபுரம் பங்கின் விசுவமடு புனித இராயப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.
குணமாக்கல் வழிபாடு
மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் உயிர்த்த ஆண்டவர் சமூகம் முன்னெடுத்த குணமாக்கல் வழிபாடு பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி ஆராதனை, குணமாக்கல் வழிபாடு என்பவற்றை உள்ளடக்கிய…
செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான செயற்பட்டு மகிழ்வோம் திறன் விருத்தி செயலமர்வு 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்கள் மற்றும் இளையோரின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள்,…
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய கள அனுபவ சுற்றுலா
புங்குடுதீவு புனித சவேரியார் ஆலய மறைக்கல்வி மாணவர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா 26ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மன்னார் மறைமாவட்டத்திற்கு சென்று அங்கு…
அருநோதய பாலர் பாடசாலை கலைவிழா
மானிப்பாய் புனித அன்னாள் ஆலய அருநோதய பாலர் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா 29ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பாடசாலை காப்பாளர் அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் வழிநடத்தலில் பாடசாலை பொறுப்பாசிரியர் திருமதி கனிஸ்ரா சுபாநந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
