Category: What’s New

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றெஜிகுமார் அவர்களின் அன்புத்தாயார் செபமாலையம்மா அவர்கள் கடந்த 03ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். இவரின் வாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

நித்தியவெட்டை திரு இருதய ஆண்டவர் திறப்பு விழா

கட்டைக்காடு பங்கின் நித்தியவெட்டை பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதய ஆண்டவர் ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்பு விழாவும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…