Author: admin

பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதயநாதர் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 9ஆம் ஆண்டு நிறைவு

பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் திரு இருதயநாதர் சபை ஆரம்பிக்கப்பட்டதன் 9ஆம் ஆண்டு நிறைவை சிறப்பித்து முன்னெடுக்கப்பட்ட நன்றி திருப்பலி மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருமறைக் கலாமன்ற இறந்த அங்கத்தவர்களுக்கான சிறப்புத் திருப்பலி

திருமறைக் கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி கார்த்திகை மாதம் 29ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன்…

மாதகல் புனித செபஸ்ரியார் ஆலயத்தில் புனித சிசிலியா திருவிழா

மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி மேரிறோஸ் அவர்களின் உதவியுடன் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள்…

டிட்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனம் உதவி

டிட்வா புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனம் உதவிகளை வழங்கிவருகின்றது. நிறுவன இயக்குனர் அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வில் பேரிடர் காரணமாக இடம்பெயர்ந்து மன்னாரின் நானாட்டன், மடு மற்றும் மன்னார் நகர பகுதிகளிலுள்ள…

திருகோணமலை மறைமாவட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவருகைக்கால ஜெப ஆராதனை மார்கழி மாதம் 05ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அலஸ்தோட்டம் இறையிரக்க திருத்தலத்தில் நடைபெற்றது. திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருப்பலி, நற்கருணை…