கிளாரட் சர்வதேச கல்லூரி திறப்புவிழா

காலி மறைமாவட்டம் பரவகும்புக திருக்குடும்ப ஆலய வளாகத்தில் கிளரேசிய அருட்தந்தையர்களால் அமைக்கப்பட்ட கிளாரட் சர்வதேச கல்லூரி திறப்புவிழா மாசி மாதம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் காலி மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமன்ட் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து பாடசாலையை ஆசீர்வதித்து…

காரைதீவு குழந்தை இயேசு ஆலய திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் காரைதீவு குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அம்புறோஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 05ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 07ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அனுசியஸ் அவர்களின் அன்புத்தந்தை அந்தோனிப்பிள்ளை வேதநாயகம் அவர்கள் மாசி மாதம் 09ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.