இரத்ததான நிகழ்வு

கிளிநொச்சி பங்கின் வின்சென்ட் டீ போல் சபை புனித திரேசாள் பந்தியினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 20 வரையான…

‘கல்வாரி கண்ட காவியன்’ தவக்கால ஆற்றுகை

மணற்காடு பங்கு மறைக்கல்வி மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ‘கல்வாரி கண்ட காவியன்’ தவக்கால ஆற்றுகை கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பங்குதந்தை அருட்தந்தை யோண் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி றோசி மற்றம் மறையாசிரியர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இவ்வாற்றுகையில் 60 மாணவர்கள்…

உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை

மன்னார் மறைமாவட்டம் பேசாலை பங்கில் முன்னெடுக்கப்பட்ட உடக்குபாஸ் தவக்கால ஆற்றுகை கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை புனித வெற்றிநாயகி ஆலய பாஸ் மண்டபத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை செபமாலை அன்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ் ஆற்றுகையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மக்களென…

‘இயேசுவைப் போல் நாமும் செபிப்போமா?’ பாஸ்கா நாடகம்

மட்டக்களப்பு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘இயேசுவைப் போல் நாமும் செபிப்போமா?’ பாஸ்கா நாடகம் கடந்த 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்களினால் ஆற்றுகை செய்யப்பட்ட இந்நாடகத்தை பலரும் பக்தியுடன் பார்வையிட்டனர்.

பந்தலடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

யாழ். புனித மரியன்னை பேராலயத்தின் கீழ் அமைந்துள்ள பந்தலடி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.