பறப்பாங்கண்டல் புனித கார்மேல் அன்னை ஆலய அபிசேக நிகழ்வு
மன்னார் மறைமாவட்டம் பறப்பாங்கண்டல் புனித கார்மேல் அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய அபிசேக நிகழ்வு ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆரோக்கியம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…
திருகோணமலை புனித மரியாள் பேராலய இளையோர் ஒன்றிய இரத்ததான முகாம்
திருகோணமலை மறைமாவட்டம் புனித மரியாள் பேராலய திருவிழாவை சிறப்பித்து ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் ஆவணி மாதம் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை டன்ஸ்ரன் பற்றிக் ஜோசப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள், இராணுவ…
மட்டக்களப்பு – சொறிக்கல்முனை லூர்த்து அன்னைபுர சிற்றாலய திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தல பங்கிற்குட்பட் லூர்த்து அன்னைபுர சிற்றாலய திருவிழா ஆவணி மாதம் 15ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை ஜீனோ சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமனம்பெற்றுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வு திருப்பலி இம்மாதம் 26ஆம் திகதி புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராயலத்தில் நடைபெறவுள்ளது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட நுழைவாயிலில் ஆயர் அவர்கள்…
அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலய எறிகணைத்தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை அரச படையினரால் அல்லைப்பிட்டி புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஆவணி மாதம் 13ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
