ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி
இளவாலை புனித யூதாததேயு ஆலய பொன்விழாவை முன்னிட்டு பொன்விழா விளையாட்டு குழுவால் முன்னெடுக்கப்பட்ட பங்கின் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால யாத்திரை
கிளிநொச்சி மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை செபமாலை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளையோர் வவுனியா கோமரசங்குளம் கல்வாரி திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு…
காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 18ஆம் திகதி புதன்கிழமை போயிட்டி புனித லூர்து அன்னை ஆலயத்திலும் 16ஆம் திகதி திங்கட்கிழமை நாரந்தனை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குமிழமுனை தூய…
கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலய வீதி சிலுவைப்பாதை
கொய்யாத்தோட்டம் பங்கு கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை இராஜேந்திரம் ஸ்ரலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை தியானத்தில் 100க்கும் அதிகமான இறைமக்கள் பக்தியுடன் பங்குபற்றியிருந்தனர். சிலுவைப்பாதை நிறைவில்…
நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி கண்காட்சி
நாவாந்துறை புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி பங்குனி மாதம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்பள்ளி அதிபர் நல்லாயன் கன்னியர் சபை அருட்சகோதரி றஞ்சனா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறார்களின் கைவண்ணத்தால் உருவாக்கப்ட்ட ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வில் சிறார்கள்…
