அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் நினைவாக முல்லைத்தீவு பங்கின் புனித கார்லோ இளையோர் ஒன்றியத்தால் முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்கு பீடப்பணியாளர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட அருட்தந்தை சரத்ஜீவன் ஞாபகார்த்த சுற்றுக்கிண்ண உதைப்பந்தாட்ட போட்டி 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஒன்றிய தலைவர் திரு. அருள்நேசபாலன் சுஜீவன்குமார் அவர்களின் தலைமையில் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 05 அணிகள் பங்குபற்றியிருந்ததுடன் முல்லைத்தீவு பங்கு முதலாமிடத்தையும் அளப்பில் பங்கு இரண்டாம் இடத்தையும் முகத்துவாரப்பங்கு மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இந்நிகழ்வில் உடுப்புக்குளம் பங்குத்தந்தையும் அளம்பில் சுவாமி தோட்ட இயக்குனருமான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் முல்லைத்தீவு மறைக்கோட்ட முதல்வரும் பங்குத்தந்தையுமான அருட்தந்தை இராஜசிங்கம் மற்றும் மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் அருட்தந்தை சரத்ஜீவன் அவர்களின் சகோதரிகள் அருட்சகோதரி மரீனா மற்றும் செல்வி நித்திலா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.

By admin