மறைக்கல்வி தினத்தை முன்னிட்டு குருநகர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஏற்பாட்டில் மறையாசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து மறைக்கல்வி மாணவர்களுக்கான ஒன்றுகூடலும் மாலை விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

By admin