ஊர்காவற்துறை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை புனித சவேரியார் குருத்துவ கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்கள் தலமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 12ஆம் திகதி திங்கட்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை பேனாட் றெக்னோ அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருநாளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட சித்திரப் போட்டி கவிதைப் போட்டி மற்றும் நவநாட் கால மறையுரைகளை அடிப்படையாகக் கொண்ட எழுத்து பரீட்சை என்பவற்றில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் அன்று மாலை புனிதரின் திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

By admin