Category: What’s New

மறைமாவட்ட தவக்கால யாத்திரைத்தலம்

யாழ் மறைமாவட்டத்தின் மல்லாவிப் பங்கின் துணைப் பங்கான வவுனிக்குளத்தில் தவக்கால தியானத்திற்கான கல்வாரிப் பூங்கா புதிதாக புனரமைக்கப்பட்டு 10.2.2017 வெள்ளிக்கிழமை அன்று மறைமாவட்டத்தின் குருமுதல்வர் அருடத்தந்தை யோசப் ஜெபரெட்ணம் அடிகளாரால் திறந்துவைக்கப்பட்டது.

மறைமாவட்ட குருக்களின் தவக்காலத் தியானம் 2017

மறைமாவட்ட குருக்களின் வருடாந்த தவக்காலத் தியானம் 16. 3. 2017 வியாழக்கிழமை அன்று சில்லாலையில் நடைபெற்றது. இவ்வருடம் தூய யோசவ் வாஸ் ஆண்டாக இலங்கைத் திருச்சபை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எமது மறைமாவட்டத்திலும் அவரை நினைவுகூரும் விதமாக அவருடைய திருத்தலம் சில்லாலையில் உருவாக்கப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழக இளங்கலைமாணி, முதுகலைமாணி பட்டமளிப்பு விழா!

பிசப் சவுந்தரம் மீடியா சென்ரர் மூலம் கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகத்தில் Visual communication இளகலைமாணி பட்டம் மற்றும் Mass media & Communication முதுகலைமாணி பட்டம் பெறும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நேற்று 22.02.2017 யாழ். சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா…

அருட்பணி. ம. தயாகரன் அடிகளாரின் ‘காருண்யம்’ இறுவெட்டு வெளியீட்டு விழா

அருள்பணி. ம.தயாகரன் அடிகளாரின் ‘காருண்யம்’ இறுவட்டின் வெளியீட்டு நிகழ்வு 30.01.2017அன்று திருமறைக்கலாமன்ற கலையகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மறைமாவட் மாவட் ஆயர் பேரருட்திரு. ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட நிதி முகாமையாளர்…

மரிய சேவியர் அடிகளாருக்கு கம்பக் கலாநிதி விருது – 2017

கொழும்புக் கம்பன் கழக முன்னாள் செயலர் அமரர் பொன் பாலசுந்தரம் நினைவு விருதான கம்பக் கலாநிதி. இரா இராதகிருஷ்ணன் விருது கடந்த 12. 2. 2017 ஞாயிற்றுக்கிழமை அன்று அருட்பணி. மரிய சேவியர் அடிகளாருக்கு வழங்கப்பட்டது.