முல்லைத்தீவு விசுவமடு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய மக்கள் ஒரே இடத்தில் இணைந்து மருதமடு அன்னையை வரவேற்கும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
அன்னையின் திருச்சுருபம் தர்மபுரம் பங்கிலிருந்து உடையார்கட்டிற்கு செல்லும் வழியில் விசுவமடு ரெட்பான ஆகிய இடங்களில் ஒன்றுகூடிய பல்லாயிரக்கணக்கான இந்துசமய மக்கள் மலர்தூவி கைகளில் தீபங்கள் ஏந்தி அன்னையை வரவேற்று அன்னையின் ஆசீரைபெற்றனர்.
யாழ். மறைமாவட்ட பங்குகளை தரிசிக்க வருகைதரும் மருதமடு அன்னையை மதம் கடந்து அனைத்து மக்களும் ஒன்றாக இணைந்து வரவேற்று அன்னையின் ஆசீரை பெற்றுச்செல்லும் இவ்வேளையில் விசுவமடு பிரதேசத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துசமய மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி அன்னையை வரவேற்றமை ஒரு சிறப்பான நிகழ்வாக அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin