திருமறைக்காலமன்றம் இளவாலைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதன் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது.

மன்ற இணைப்பாளர் திரு. பியன்வெனு அவர்களின் தலைமையில் திருமறைக்கலாமன்ற இயக்குனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம் அவர்களின் வாழ்த்துரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் இந்நாளை சிறப்பிக்கும் கலைநிகழ்வுகளும் கலைஞர்களுக்கான கௌரவிப்புக்களும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் மற்றும் யாழ். பல்கலைக்கழக சேர். பொன் இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீட பீடாதிபதி திரு. சிவரூபன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் திருமறைக்கலாமன்ற பிரதி இயக்குநர் திரு. யோன்சன் ராஜ்குமார் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

By admin