இலங்கை தேசிய கத்தோலிக்க குடும்ப அப்போஸ்தலிக்க ஆணைக்குழுவின் வருடாந்த ஒன்றுகூடல் கடந்த 25, 26ஆம் திகதிகளில் கண்டி மொண்டோபானோ தியான இல்லத்தில் நடைபெற்றது.

தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜிகான் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆணைக்குழுவிற்கு பொறுப்பான ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அங்கத்தவர்களுக்கான ஒன்றுகூடல், சிறப்பு திருப்பலி, அனுபவ பகிர்வு என்பன நடைபெற்றன.

அத்துடன் கொழும்பு மறைமாவட்டத்தில் நடைமுறையிலுள்ள PNI திருமண முன்னாயத்த படிவம், திருமண சீரமைப்பு படிவம் மற்றும் திருமண சான்றிதழ் என்பவை இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டு ஏனைய மறைமாவட்டங்களிலும் விரும்பினால் இப்படிவங்களை பயன்படுத்தலாமென சிபார்சு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மறைமாவட்ட இயக்குநர்கள், பிரதிநிதிகளென 40 வரையானவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

By admin