Author: admin

தேசிய ரீதியில் தமிழ்மொழி தினப்போட்டிகள்

கல்வி அமைச்சினால் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்மொழி தினப்போட்டிகள் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றன. இப்போட்டிகளில் பங்குபற்றிய புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பாலச்சந்திரன் கீர்த்தனன் கீழ்ப்பிரிவு ஆக்கத்திறன் வெளிப்பாடு போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

உலக அமைதிக்காக தர்மபுரம் பங்கில் செபமாலைப் பேரணி

செபமாலை மாதத்தின் சிறப்பு நிகழ்வாகவும் உலக அமைதி வேண்டியும் தர்மபுரம் பங்கில் முன்னெடுக்கப்ட்ட செபமாலைப் பேரணி 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் ஆரம்பமாகி விசுவமடு…

அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா

ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் மகாவித்தியாலயத்தில் கடந்த 8 வருடங்கள் அதிபராக பணியாற்றி மாற்றலாகி செல்லும் அருட்சகோதரி கிறேஸ்மேரி ஸ்ரனிஸ்லஸ் அவர்களின் சேவைநலன் பாராட்டுவிழா 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்துறை பங்கில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் தலைமையில்…

இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா

யாழ். மருதனார்மடத்தில் அமைந்துள்ள இலங்கை கிறிஸ்தவ இறையியல் குருத்துவ கல்லூரியின் 40ஆவது ஆண்டு நிறைவு விழா 28ஆம் ஆண்டு சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்பணி கமலகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நன்றி வழிபாடும் தொடர்ந்து வாழ்த்துச்செய்திகளும் இடம்பெற்றன.…

சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி

திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப்பாடத்தையும் ஏனைய…