திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் ஏற்பாட்டில் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் சித்திரமுத்திரைகள் ஓவிய கைவினைப்பொருட்களின் கண்காட்சி 03ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது.
கலைத்தூது அழகியல் கல்லூரியில் சித்திரப்பாடத்தையும் ஏனைய நுண்கலைப்பாடங்களையும் பயிலுகின்ற மாணவர்களது ஆற்றல்களை வெளிக்கொணரும் முகமாக நடாத்தப்பட்டு வருகின்ற இக்கண்காட்சியில் இம்முறை அயற்பாடசாலைகளில் சித்திரப்பாடத்தை பயிலுகின்ற மாணவர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் தென்மராட்சி வலய அழகியற்பாடங்களுக்கான ஓய்வுநிலை உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. கைலாசநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கன்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

By admin