Author: admin

“சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு

போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “சமகால அரசியலும் போராளிகளின் வகிபாகமும்” மாநாடு ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. ஈகைச்சுடரேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் அகவணக்கம், மலரஞ்சலி என்பவற்றுடன் வரலாற்றின் வேர்கள் விருது வழங்கும் நிகழ்வு, சிறப்புரைகள்…

சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும்

புதிதாக அமைக்கப்பட்டுவந்த உடையார்கட்டு, சுதந்திரபுரம் புனித அந்தோனியார் ஆலய திறப்புவிழாவும் திருவிழாவும் ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பங்கின் புனித யூதாததேயு மறைப்பாடசாலை பாண்ட்…

வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆனி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. போராட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர்…

நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு

தொடர்பாடலாண்டு சிறப்பு நிகழ்வாக முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோரை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் தொடர்பான கருத்தமர்வு ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. முல்லைத்தீவு மறைக்கோட்ட ஊடக இணைப்பாளர்…

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான குத்துச்சண்டை, கூடைப்பந்தாட்ட, செயல்பட்டு மகிழ்வோம் போட்டிகள்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட 18 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச்சண்டை போட்டி, ஆனி மாதம் 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வடமராட்சி சென் தோமஸ் மகளிர் பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களான செல்வன் பிரணாத் 75 –…