யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரியில் திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருப்பணிகள் வழங்கல் மற்றும் குருத்துவ வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் திருச்சடங்குகள் கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றன.
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி சிற்றாலயத்தில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் அருட்சகோதரர்களான பீற்றர் அமலதாஸ் கமல்ராஜ் மற்றும் யேசுரத்தினம் அன்ரன் கஜீஸ்காந்த் ஆகியோர் திருத்தொண்டர்களாக திருநிலைப்படுத்தப்பட்டார்கள்.
அத்துடன் யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, சிலாபம், பதுளை ஆகிய மறைமாவட்டங்களையும் பிரான்சிஸ்கன் சபையையும் சேர்ந்த 12 அருட்சகோதரர்களுக்கு பீடத்துணைவர்கள், வாசகர்கள், குருத்துவ வேட்பாளர் திருப்பணிகள் வழங்கிவைக்கப்பட்டன.
கிறிஸ்துவின் திருவுடலாகிய திவ்விய நற்கருணை போல் உடைந்து உலகிற்கு உயிர்கொடுக்க முன்வரும் அருட்சகோதரர்களுக்கு ஆசி வழங்கிட இந்நிகழ்வில் குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.

By admin