யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்ற இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள புனித வியாகுல அன்னை மரியின் ஊழிய சபை அருட்சகோதரிகள் தங்கள் பணியை கிளிநொச்சி மறைக்கோட்டத்திலுள்ள தர்மபுரம் பங்கில் ஆரம்பித்துள்ள நிலையில் அவர்களுடைய கன்னியர் மட திறப்பு விழா 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை நிக்சன் கொலின்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கன்னியர் மடத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்து திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin