மன்னார் மறைமாவட்ட புனித ஜோசப்வாஸ் இறையியல் கல்லூரியின் புதிய கல்வியாண்டின் ஆரம்ப நிகழ்வு 06ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் அருட்தந்தை கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்கள் கலந்து திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
தொடர்ந்து புதிய கல்வியாண்டிற்கான ஆரம்ப விரிவுரையை மன்னார் மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்தந்தை வசந்தகுமார் அவர்கள் ‘சமூக ஊடகங்களும் திரு அவையின் திருப்பணிகளும்’ என்னும் தலைப்பில் நிகழ்த்தினார்.

By admin