இறை அழைத்தலை ஊக்குவிக்கும் முகமாக சலேசியன் சபை அருட்தந்தையர்களால் முன்னெடுக்கப்பட்ட இறை அழைத்தல் பாசறை 4ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை தொடக்கம் 6ஆம் திகதி இன்று சனிக்கிழமை வரை முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ சிறிய குருமடத்தில் நடைபெற்றது.
சபையின் இறை அழைத்தலுக்கு பொறுப்பான அருட்தந்தை மரிசல் டிலான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ‘வந்து பாருங்கள்’ என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை டிலான், அருட்தந்தை செபஞானம், அருட்சகோதரர்களான தவக்குமார், றொசாந்தன் மற்றும் இருதயநாதர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், சிறப்பு வழிபாடுகள், காணொளிகள், குழுச்செயற்பாடுகள், விளையாட்டுக்கள் என்பவற்றினூடாக மாணவர்களை நெறிப்படுத்தினார்கள்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், மன்னார், இரத்தினபுரி மறைமாவட்டங்களை சேர்ந்த 60 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin