யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தின் ஏற்பாட்டில் கிறிஸ்தவ நாகரிகத்துறையின் அனுசரணையில் முன்னெடுக்கபட்டுவரும் கிறிஸ்தவ கற்கைநெறிகள் முதுமானி பட்டப்படிப்புக்கான இரண்டாவது அணியின் கல்வி ஆண்டு ஆரம்ப நிகழ்வு 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தில் இக்கற்கைநெறியின் இணைப்பாளரும் கிறிஸ்தவ நாகரீகத்துறை தலைவருமான பேராசிரியர் அருட்தந்தை போல் றொகான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திரு. சிறிசற்குணராஜா, முன்நாள் துணைவேந்தர் பேராசிரியர் திரு. சண்முகலிங்கன், பட்டப்படிப்புக்கள் பீட தலைவர் பேராசிரியர் திரு. கண்ணதாசன் மற்றும் கலைத்துறை பீடாதிபதி பேராசிரியர் திரு. ரகுராம் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இவ் இரண்டாவது அணிக்கான கற்கைநெறியில் 37மாணவர்கள் இணைந்து கல்வி பயிலவுள்ளனர்.

By admin