யாழ்ப்பாண மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்” பற்றி சாட்டி சிந்தாத்திரை அன்னை திருத்தல பரிகாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களும் “திருவழிபாட்டு திரு இசை” என்னும் தலைப்பில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களும் திருஅவை மற்றும் யாழ். மறைமாவட்டத்தினுடைய திருவழிபாடு சார்ந்த விதிமுறைகள் தொடர்பாக அருட்தந்தை தயாகரன் அவர்களும் கருத்துரைகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பங்குகளின் வழிபாட்டு குழு உறுப்பினர்கள், பாடகர் குழாமினர் மற்றும் திருப்பண்ட பீடக்காப்பாளர்கள் என 100ற்கும் அதிகமானவர்கள் கலந்து பயனடைந்தனர்.

By admin