இளவாலை புனித யூதாததேயு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 13ஆம் திகதி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
04ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை இயேசு சபை அருட்தந்தை எழில் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.

By admin