முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்க்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…
பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் பூதவுடல் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நல்லடக்கம்
மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயரும் ஒய்வுநிலை ஆயருமான பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்கள் 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தனது 73ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார். மட்டக்களப்பு, தன்னாமுனையில் 1952ஆம் ஜப்பசி மாதம் 12ஆம் திகதி பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை…
மன்னார் தீவின் அழிவிற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாது
திட்டமிடப்பட்ட முறையில் மிக வேகமாக அழிக்கப்பட்டு வரும் மன்னார் மாவட்ட மன்னார் தீவின் அழிவிற்கு மக்கள் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்க கூடாதென மன்னார் பிரஜைகள் குழு தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் கனிய மண் அகழ்வு…
யாழ். மறைமாவட்ட குருமுதல்வருடனான சந்திப்பு
செபமாலை தாசர் சபை இலங்கை மாகாண முதல்வர் அருட்தந்தை அனில் கிறிஸாந்த அவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு 23ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் 10 புதிய குருக்கள்
மன்னார் மறைமாவட்டத்தில் புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு 22ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்…