மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை மறைக்கோட்ட பங்குகளில் பணியாற்றும் மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் 17 ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். குருநகர், புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா
பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை மிகவும் சிறப்பான முறையில் அங்கு நடைபெற்றது.
“வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை யதார்த்த வாழ்வியலோடு சித்தரிக்கும் “வலியோடு ஓரு பயணம்” என்னும் சிலுவைப்பாதை நூல் வெளியீடு 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் இடம்பெற்றது.
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
அருட்தந்தை சறத்ஜீவன் நிதியத்தினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 10ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாரீசன்கூடல் றோ.க.த.க பாடசாலையில் நடைபெற்றது.
முழங்காவில் பங்கில் சிறப்பு நிகழ்வுகள்
முழங்காவில் பங்கிலுள்ள மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நாகபடுவான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கற்றல் பற்றிய விழிப்புணர்வு கருத்துரைகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
