வவுனியா மறைக்கோட்ட இளையோர் செபமாலை பேரணி

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வவுனியா மறைக்கோட்டத்தில் இளையோரை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகிய இச்செபமாலை பேரணி…

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் இரத்ததான முகாம்

புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் இடம்பெற்றது. ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பங்குத்தந்தை அருட்தந்தை நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 35 வரையான…

சவேரியார் குருத்துவக் கல்லூரியில் இரத்ததான முகாம்

யாழ். புனித சவேரியார் குருத்துவக் கல்லூரியில் குருத்துவ உருவாக்கத்தை நிறைவுசெய்து, கடந்த நான்கு வருடகாலத்தில் திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தையர்கள் ஒன்றிணைந்து குருத்துவக் கல்லூரியில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுத்த நிகழ்வு 19ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் – வெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை

நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுத்த வெனு அன்னை திருத்தலம் நோக்கிய தமிழர் திருயாத்திரை 13 ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இவ்வருடம் 25வது யூபிலி ஆண்டாக சிறப்பிக்கப்பட்ட இத்திருயாத்திரை நிகழ்வில்பெல்ஜியம் பெனு அன்னையின் திருத்தலத்தில், சமயம், மொழி, இனம்…

நெடுந்தீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

நெடுந்தீவு புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு அருட்தந்தை சோபன் அவர்களின் வழிநடத்தலில் 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அருட்தந்தை அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வு இடம்பெற்றது.