முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை

முல்லைத்தீவு மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான பாசறை புரட்டாதி மாதம் 04, 05ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் மாணவர் விடுதியில் நடைபெற்றது. மறைக்கோட்ட பீடப்பணியாளர் இணைப்பாளர் அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…

ஆயருடனான சந்திப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு புரட்டாதி மாதம் 07ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட ஆயர்…

புதுக்குடியிருப்புப் பங்கில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு

புதுக்குடியிருப்புப் பங்கில் முன்னெடுக்கப்பட்ட சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு ஆவணி மாதம் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தரம் உயர் தர…

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற “கலைச்சாரல்” நிகழ்வு

யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட “கலைச்சாரல்” நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள மன்ற திறந்தவெளி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரி மாணவர்களின் நடனம், செல்வன் டிலீப் அமுதன் பிரணீத் அவர்களின்…

திருமண பந்தந்தில் இணைந்து 25ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு

உருத்திரபுரம் பங்கில் திருமண பந்தந்தில் இணைந்து 25ஆண்டுகளை நிறைவுசெய்த தம்பதிகளுக்கான சிறப்பு நிகழ்வு புரட்டாதி மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை…