ஆயருடனான சந்திப்புக்கள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு மாசி மாதம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.…

யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய சாம் மற்றும் பிழைதீர்க்கும் மந்திரம் பாடல் போட்டிகள்

தவக்கால பக்திமுயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கோடு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தால் இவ்வருடமும் பசாம் மற்றும் பிழைதீர்க்கும் மந்திரம் பாடல் போட்டிகள் நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக…

இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்கள பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல்

அருகிவரும் கிறிஸ்தவ கலைகளை பாதுகாத்து அவற்றை வளர்க்கும் நோக்கோடு பசாம் மற்றும் தவக்கால ஒப்பாரி புலம்பல் பாடல் போட்டிகளை நடாத்த இலங்கை கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம் இவ்வருடமும் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இப்போட்டிக்கு வயது வேறுபாடின்றி குழுவாக விண்ணப்பிக்க முடியுமெனவும் தமிழ்…

கள தரிசிப்பு பயணம்

கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன செயற்திட்டங்கள் தொடர்பான அனுபவங்களையும் விளக்கங்களையும் பெற்றும்கொள்ளும் நோக்கோடு வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இணைந்து மேற்கொண்ட கள தரிசிப்பு பயணம் மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வன்னி…

14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY காற்பந்தாட்ட இறுதிப் போட்டி

இலங்கை பாடசாலைகள் காற்பந்தாட்ட சங்கம் தேசிய ரீதியில் நடாத்திய 14 வயதுப் பிரிவினருக்கான SAMAPOSHA CHAMPION TROPHY கிண்ணத்துக்கான காற்பந்தாட்ட இறுதிப் போட்டி மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு RACE COURSE விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில்…