Category: What’s New

சமகால கிறிஸ்தவ சிந்தனைகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிறிஸ்தவ நாகரிகத்துறையின் ஏற்பாட்டில் சமகால கிறிஸ்தவ சிந்தனைகள் என்ற தலைப்பில் நழடபெறும் மெய்நிகர் வழியிலான விரிவுரைத்தொடரின் 23 வது தொடர் 02ம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

கிறீஸ்தவ அருட்பணியாளர்களுக்கான ஒன்றிப்பு வார வழிபாடும் கலந்துரையாடலும்

மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் வருடம் தோறும் இடம்பெறுகின்ற அனைத்து கிறீஸ்தவ அருட்பணியாளர்களுக்கான ஒன்றிப்பு வார வழிபாடும் கலந்துரையாடலும் இவ் வருடமும் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யோசப் பொன்னையா அவர்களின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அருட்திரு மிலந்த கஜன் பெணாண்டோஇறைவனடி சேர்ந்தார்.

கொழும்பு மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருட்திரு மிலந்த கஜன் பெணாண்டோ அவர்கள் 31ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

புனித மொண்பர்ட் சர்வதேச பாடசாலை திறந்து வைக்கப்பட்டது.

அல்லைப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள புனித மொண்பர்ட் சர்வதேச பாடசாலை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் அவர்களினால் 19ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.