Category: What’s New

கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு

கத்தோலிக்க அருங்கொடை புதுவாழ்வு குழுமத்தில் புதிய அங்கத்தவர்களை இணைக்கும் நிகழ்வு 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள இறைதியான இல்லத்தில் நடைபெற்றது. புதுவாழ்வு குழுமத்தின் ஆன்மீக குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

புனித இசிதோர் வரவேற்பு திருச்சொருப திறப்புவிழா

அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருஅவைக்கு சொந்தமான சுவாமி தோட்டத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுவந்த புனித இசிதோரின் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை…

புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலய திருவிழா

புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 14ஆம்…

கார்கில்ஸ் நிறுவன பொது முகாமையாளர் யாழ். மறைமாவட்ட ஆயரை சந்திப்பு

கார்கில்ஸ் நிறுவன பொது முகாமையாளர் திரு. றஞ்சித் பேஜ் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு 18ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.

அருட்சகோதரி மேரி றோசி அவர்களின் பிரியாவிடை

மிருசுவில் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் பணியாற்றிவந்த அருட்சகோதரி மேரி றோசி அவர்கள் பணிமாற்றலாகி செல்லும் நிலையில் அவருக்கான பிரியாவிடை நிகழ்வு கச்சாய் புனித இராயப்பர் ஆலயத்தில் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லோறன்ஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…