Category: What’s New

மன்னார் மறைமாவட்ட சிறப்பு ஆய்வு கருத்தமர்வு

கூட்டெருங்கியக்க திருஅவையாக பயணிப்போம் எனும் மையக்கருவில் முன்னெடுக்கப்படும் 16வது உலக ஆயர் மன்றத்தின் 2வது அமர்விற்கு மன்னார் மறைமாவட்டத்திலிருந்து கருத்துக்களை பெற்றுக்கொள்ளுமுகமாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஆய்வு கருத்தமர்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் மறைமாவட்ட புனித யோசவ்வாஸ் இறையியலகத்தில் நடைபெற்றது.…

இளவாலை புனித யூதாததேயு ஆலய வீதி சிலுவைப்பாதை

இளவாலை புனித யூதாததேயு ஆலய பங்குமக்களால் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 08ஆம் திகதி இடம்பெற்றது. இளவாலை உயரப்புலத்தில் ஆரம்பமாகிய இச்சிலுவைப்பாதை சீந்திப்பந்தலை சென்றடைந்து அங்கு அருட்தந்தை தேவராஐன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற…

நல்லூர் பங்கு தவக்கால யாத்திரை

நல்லூர் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை கடந்த 07,08,09ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஹினிதும, தல்கஸ்வல ஆகிய இடங்களை தரிசித்து அங்கு நடைபெற்ற சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம்,…

பொற்பதி புனித இராயப்பர் ஆலய சிலுவைப்பாதை யாத்திரை

மணற்காடு பங்கின் குடத்தனை பொற்பதி புனித இராயப்பர் ஆலயத்தில் இயங்கும் சின்னப்பர் தோழமை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட சிலுவைப்பாதை யாத்திரை கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை பொற்பதி புனித இராயப்பர்…

கோப்பாய் புனித மரியன்னை ஆலய இரத்ததான முகாம்

தவக்கால சிறப்பு நிகழ்வாக கோப்பாய் புனித மரியன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் கடந்த 16ஆம் திகதி சனிக்கிழமை அங்கு நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இம்முகாமில் 14 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம்…